திருக்குறள்

1132.

நோனா உடம்பும் உயிரும் மடலேறும் நாணினை நீக்கி நிறுத்து.

திருக்குறள் 1132

நோனா உடம்பும் உயிரும் மடலேறும் நாணினை நீக்கி நிறுத்து.

பொருள்:

எனது உயிரும், உடலும் காதலியின் பிரிவைத் தாங்க முடியாமல் தவிப்பதால், நாணத்தைப் புறந்தள்ளிவிட்டு மடலூர்வதற்குத் துணிந்து விட்டேன்.

மு.வரததாசனார் உரை:

(காதலின் பிரிவால் ஆகிய துன்பத்தைப்) பொறுக்காத என் உடம்பும் உயிரும், நாணத்தை நீக்கி நிறுத்தி விட்டு மடலூரத் துணிந்தன.

சாலமன் பாப்பையா உரை:

காதலை நிறைவேற்ற முடியாது வருந்தும் இந்த உடலும் உயிரும் வெட்கத்தை விட்டுவிட்டு மடல் ஏற எண்ணுகின்றன.